முஸ்லீம் தீவிரவாதிகள் தஸ்லிமாவைத் தாக்கினர்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், ஐதராபாத்தில் எம்ஐஎம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார்.

எழுத்தாளர் தஸ்லிமா, நேற்று ஐதராபாத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட எம்ஐஎம் (மஜ்லிஸ் இத்தீஹாதுல் முஸ்லிமீன்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் தஸ்லிமா மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

விழா அமைப்பினர் மீதும் இவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். ஜன்னல்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எம்ஐஎம் எம்எல்ஏ.,க்கள் மூவரை கைது செய்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் நஸ்லிமா அழைத்துச் செல்லப்பட்டார்.

நஸ்லிமா 'லஜ்ஜா' என்ற சர்ச்சைக்குரிய புத்தக்கத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டார். இதற்கு வங்கதேசம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


பெண்ணியம்,பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனித சுதந்திரம் என்று எழுதும் பதிவர்களும்
இஸ்லாம் ஒரு அஹிம்சையை போதிக்கும் மதம் என்று பதிவிடுபவர்களும் நிறைந்திருக்கும்
தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.




free web hit counter image

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில்
"உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள்

வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு

ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும்
ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது
குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும்.

இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள்

உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ (பெண் தெய்வம்) இந்தப் பாடலைப் பாடுவது போல
கற்பனை செய்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். சொர்க்கம் நிச்சயம்


தேன் குரலில் தேனூறும் ராகம் திகட்டாமல் இருப்பது என்ன அதிசயமோ



ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வெளியான வருடம்: 1985
வரிகள்: வைரமுத்து


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

UyiraeUnakkaaga-Th...




free web hit counter image