முத்துக்குமார் தீயாய் இன்று எல்லோர் மனதிலும்

முழுதாக ஒரு வருடம் ஓடி விட்டது. இனம் அழிவது கண்டு தமிழகத்திலிருந்து உண்மையில் போராடிய முதல் வீரனான முத்துக்குமரன் வீரமரணம் அடைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. எது நடக்கக் கூடாது என்று தன் உயிரைப் பணயம் வைத்தானோ அதற்கும் மேலாகவே எல்லாம் நடந்து விட்டது. உணர்வுகள் ஏதுமற்று தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் வாழ்ந்து மண்ணோடு மக்கிப் போகும் கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அவன் கோரிக்கைகள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. ஒரு மிருகம் முத்துக்குமாரா யார் என்று கேட்டது. அதிகாரப் பேய்கள் சூழ்ந்து கொண்டு முத்துக்குமாருக்காகக் கூடிய கூட்டத்தை வஞ்சகமாய் கலைத்தன. நம் எதிரிகள் அனைவரும் முன்னை விட பலம் பொருந்தியவர்களாக ஆகி விட்டனர். துரோகிகள் அனைவரும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். தனித்து விடப்பட்ட இனம் இப்போது எந்த திசையிலிருந்து நம்பிக்கை ஒளி வரும் என்று எட்டு திக்கும் பார்த்துப் பார்த்து சோர்ந்து போயுள்ளது.



அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்து அடிமையாகவே சாக ஆசைப்படும் ஒரு இனத்தில் பெரியாரும், பிரபாகரனும் முத்துக்குமரனும் பிறந்தது அதிசயமான நிகழ்வுகள் தான். பெரியார் ஏற்றி வைத்த தீபம் நம்மை ஓரளவேனும் சுய மரியாதையோடு வாழ வைத்துள்ளது. தலைவர் பிரபாகரன் ஏற்றி வைத்த தீபம் விடுதலைத் தீயாய் இந்த உலகிற்கு தமிழினத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது. முத்துக்குமரன் ஏற்றி வைத்த தீபம் உணர்வுள்ள எல்லோர் மனதிலும் களங்கமற்ற உறுதியை ஏற்படுத்தி உள்ளது.

என்றோ ஒரு நாள் முத்துக்குமரனின் நினைவு நாள் தமிழீழத்தில் நடக்கும் என்ற உறுதியோடு முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்


free web hit counter image

எமது மக்களை வாழவிடுங்கள் - அமைதி ஒன்று கூடல்

அமைதி ஒன்று கூடல் - எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் பின்புறமாய், அக்டோபர் 02, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு






free web hit counter image

சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

நண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது



துண்டு பிரசுரம்

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.



free web hit counter image

உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படுவதை தடு‌த்து‌ ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம் உடனடியாக அ‌ங்கு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌‌த்‌தியு‌ம் கட‌ந்த 10 நா‌ட்களாக உ‌ண்ணா‌விரத‌‌ம் மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் பெ‌ண்க‌‌ளிட‌‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌மீ‌றி நட‌ந்து கொ‌ண்டன‌ர். உட‌ல் ‌நிலைமை மோசமாக இரு‌ந்த 5 பெ‌ண்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌‌த்தன‌ர்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் ரவிக்குமார், துணை ஆணையர் அன்பு ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவ‌ல்துறை‌யின‌ர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை தட்டி எழுப்பி உடல்நிலை மோசமாக இருந்த 5 பெண்கள் யார்? என்று விசாரித்தன‌ர்.

எத‌ற்காக ‌விசா‌ரி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பெ‌ண்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர். அ‌ப்போது, ‌நீ‌ங்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க கூடாது எ‌ன்று‌ம் ‌மீ‌றி இரு‌ந்தா‌ல் ‌கைது செ‌ய்வோ‌ம் எ‌ன்று கா‌வ‌ல்துறை‌யின‌ர் கூ‌றின‌ர்.

நா‌‌ங்க‌ள் காலை கடனை க‌ழி‌த்து ‌வி‌ட்டு வரு‌கிறோ‌ம் எ‌ன்று பெ‌‌ண்க‌ள் கூ‌றின‌ர். ‌இத‌ற்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி‌க்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர். பி‌ன்‌ன‌ர் ‌விடா‌ப்‌பிடியாக அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு செ‌ன்றன‌ர். அ‌ப்போது கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்றன‌ர். அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு‌ள் செ‌ன்றவுட‌ன் கா‌வ‌ல்துறை‌யின‌ர் கதவை மூடின‌ர். இத‌ற்கு பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர் கடு‌‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் உட‌ல் ‌நிலை மோசமாக இரு‌ந்த ஜெயம‌ணி, சும‌தி, த‌ங்கம‌ணி, லோகநாய‌கி, ‌சி‌த்ரா தே‌வி ஆ‌கியோ‌ரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து செ‌ன்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அ‌ங்கு அவ‌ர்களு‌க்கு கா‌வ‌ல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இ‌த‌னிடையே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சி பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர், முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நாளை அ‌றி‌வி‌த்து‌ள்ள வேலை ‌நிறு‌த்த‌ம் ஒரு க‌ண்துடை‌ப்பு நாடக‌ம் எ‌ன்று‌ம் எ‌ங்க‌ளிட‌ம் காவ‌‌ல்துறை‌யின‌ர் நட‌ந்து கொ‌ண்ட ‌வித‌ம் க‌‌ண்டி‌‌க்க‌த்த‌க்கது எ‌ன்று கூ‌றின‌ர்.


free web hit counter image



காங்கிரசை தோற்கடிப்போம்!

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?


காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.


துவக்கக் கூட்டம்:

தெய்வநாயகம் பள்ளி(c.d.nayagam), வெங்கட்நாராயணா சாலை, தியாகராயர்நகர், சென்னை- 17. திருப்பதி தேவசதனம் எதிர்புரம்.

ஏப்ரல்- 20 திங்கட்கிழமை

மாலை- 4.00 மணி

தொடர்புக்கு: 9003154128 / saynotocongress@gmail.com

இவண்

முத்துகுமார் மக்கள் எழுச்சி இயக்கம்



free web hit counter image



போலீஸ் அராஜகம் - உண்ணாநோன்பிருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக கைது

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும் அங்கு நடக்கும் போரை நிறுத்த சொல்லி வலியுறுத்தியும் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து உண்ணாநிலை போராட்டம் நடத்திய செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று காலை 6:30 மணிக்கு காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப் பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஓரளவு தெம்பாகவும் நடக்கக் கூடிய நிலையிலும் இருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர் ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுத்துள்ளனர் போலீஸார். கைது நடவடிக்கையை மறைத்து மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததன் பொருட்டே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கைது செய்யும் போது அங்கிருந்த நம் நண்பர்கள் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து விட முடியாத நிலையில் அவர்களின் கைகளை இருக்கமாக பிடித்துத் தடுத்துள்ளனர். பொங்கி எழும் உணர்வுகளை நீர்த்து போக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறது மாநில அரசு. ஜனநாயக நாட்டில் ஏழு நாட்களாக குடிமக்களில் சிலர் அறவழியில் உண்ணாநோன்பிருக்கின்றனர். என்ன ஏது என்று கேட்பதற்கு மாநில அரசிற்கும் துணிவில்லை, மத்திய அரசிற்கும் மனமில்லை. இந்த அழகில் குடியரசு தினத்தை மட்டும் கோலாகலமாக கொண்டாடிக் கொள்கின்றோம்.

free web hit counter image



காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்- இலங்கையில் போர்நிறுத்தம் கோரி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று(22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் உண்ணாநிலைப்போராட்டத்தை கைவிட வற்புறுத்திய பொழுது எங்களை கைது செய்தாலும் நாங்கள் உண்ணாநிலைப்போராட்டத்தினை தொடருவோம் என்றுக்கூறி இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விவரம் :

1) திருமுருகன்
2)இராச்குமார்,
3) மணிவேல்
4) விசயகுமார்
5) இராசா
6) பிரவீன்
7) முனீசுகுமார்
8)ஆறுமுகநயினார்
9)சுரேசு
10) கெம்புக்குமார்
11) பிரபு
12) மூர்த்தி
13) இராசதுரியன்
14) முஜீபீர் ரகுமான்

இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் எந்த ஒரு ஊடகமும் இதை கண்டுக் கொள்ளவில்லை.



free web hit counter image