கல்லூரிக்கு போகலாம்

இடஒதுக்கீட்டிற்கு எதிராக படம் எடுத்த சங்கரின் கூடாரத்திலிருந்து இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்களுடன் ஒரு படம் வெளிவந்திருப்பது விந்தை தான்.

படத்திலே பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும் இந்த வசனம் தான் பாலாஜி சக்திவேலின் சமூகப் பார்வையை உணர வைத்தது.

நாயகி நாயகனிடம் சொல்கிறாள்
"முத்து நான் படிக்கறது பெரிய விசயம் இல்ல. ஏன்னா எங்க தாத்தா Judge, எங்க அப்பா IG .நீ படிக்கறது தான் முக்கியம்"

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் நாயகி உயர்ஜாதி என்று சொல்லப் படுகின்ற வகுப்பைச் சார்ந்தவள்.

இந்த படம் பார்த்த அன்று காலையில் தான் கலைஞர் டிவியில் பாலாஜி சக்திவேலின் பேட்டியைப் பார்த்தேன்.
அவருக்கும் சங்கருக்கும் பல நேரங்களில் மனஸ்தாபங்கள் ஏற்படுமாம். அதுவும் முக்கியமாக சங்கரின் படங்களில் வரும் கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக காட்டப்படுவதில் இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் ஏற்படுமாம்.

இனி படத்திற்கு வருவோம்

எதார்த்ததிற்கும் தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் தூரம் அதிகம்.
தமிழ் சினிமாவின் பிரம்மாக்கள் என்று சொல்லிக் கொள்ள கூடிய மணிரத்னம், பாரதிராஜா மற்றும் பலரும் கூட கமர்சியல் என்ற சகதியில் சிக்கி கரையேர முடியாமல் போனவர்கள் தான்.

முதலில் கதாபாத்திர தேர்வு. எங்கிருந்து பிடித்தாரோ இத்தனை அப்பட்டமான கல்லூரி மாணவர்களை. நகைச்சுவைக்கு கூட செயற்கையாய் நடிக்கவில்லை அவர்கள்.

அடுத்து நாயகனின் தங்கையாக வரும் அந்த சிறுமி. அந்த முகத்தில் நிறைந்திருப்பதெல்லாம் அப்பாவித்தனம் மற்றும் வறுமை. படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆனாலும் அந்த முகம் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.

ஒரு திருமண விழாவிலே நாயகியை பாட மேடைக்கு அழைப்பார்கள். மற்ற இயக்குனராக இருந்திருந்தால் ஆஹா அருமையான சிச்சுவேசன் என்று இந்த இடத்தில் ஒரு புது பாடலை போட்டிருப்பார்கள். ஆனால் பாலாகி சக்திவேல் அந்தத் தவறை செய்யவில்லை. வெகு இயல்பாய் நாயகி மேடை ஏறி பழைய பாடலான "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" என்ற பாடலை முழுவதுமாகப் பாடி முடிப்பது கவிதை.

இடையில் நண்பர்களுக்கிடையேயான ஊடல், கலாட்டா போன்ற விசயங்கள் இயல்பாய் காட்டப்படுகின்றன.

தருமபுரியில் நடந்த பேருந்து எரிப்பு சம்பவம் போன்று இறுதியில் வரும் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று தான். இது போன்ற விபத்துக்கள் வர போகிறேன் என்று சொல்லி வைத்துக் கொண்டா வரும்.
இருந்தும் மிகக் கொடுமையான காட்டுமிராண்டித் தனம் அரங்கேறி அதற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் அதை திரும்பவும் எண்ணிப் பார்ப்பது
இறந்த உயிர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கட்டும்.




free web hit counter image


எழுத்தும் எதிர்ப்பும் தஸ்லிமா நஸ் ரீன்

எழுத்தும் எதிர்ப்பும்
களந்தை பீர்முகம்மது


தஸ்லிமா நஸ் ரீன் அண்மையில் மதவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார். ஹைதராபாத்தில் அவருடைய நூலின் மொழியாக்கம் வெளியிடப்பட்டபோது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தாக்கிய நபர்களின் அந்தஸ்து சாதாரணத் தொண்டர்களில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளது. மதவாதம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வரும்போது, தன் மேம்பாட்டை உணர்த்திக்கொள்வதற்கான அடையாளமாகத் தன் அடியாள்களின் நிலையையும் உயர்த்திக் கொள்ளும் போலும்


இந்தத் தாக்குதல் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ஆறுதலான செய்தியும் இல்லாமலில்லை. குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஹமீத் அன்சாரிக்கு, தன் கண்டனத்தைப் பதிவுசெய்வதுதான் முதல் வேலையாக அமைந்துள்ளது. வெற்றிபெற்றபின் நிருபர்களுக்கு மத்தியில் தோன்றிய அவர், வேறெந்தப் பின்விளைவுகளையும் மனத்தில் கருதாது உடனடியாகவே செயல்பட்டிருப்பது நல்ல செய்தி.

லஜ்ஜா நாவலை எழுதியது முதற்கொண்டே தஸ்லிமாவுக்குச் சோதனைக் காலம் ஆரம்பமாகிவிட்டது. அந்த நாவல் உரிய முறையில் புரிந்துகொள்ளப்படாதது பெரிய சோகம். முஸ்லிம்களின் சில தவறான நடைமுறைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருப்பதையும் மத அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும், ஒரு பெண்ணின் எதிர்ப்பும் எழுத்துக்களும் எந்தவொரு மதத்தின் நியாயசபையிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒரு பரிசீலனைக்குரிய விசயமாகக்கூட அவை கருதப்படமாட்டா. மனித சக்திக்கு மீறிய கால ஓட்டத்தினால்தான் எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் 21ஆம் நூற்றாண்டில் வந்து விழுந்துகிடக்கிறார்களே தவிர, தம் சிந்தனை மரபுகளாலும் நாகரிக உந்துதலினாலும் இங்கு இன்னும் அவர்கள் வந்து சேரவில்லை. அதனால்தான் கலை வெளிப்பாடுகளும் கருத்து வெளிப்பாடுகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தஸ்லிமா நஸ்ரீன்மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாறாத உண்மையைத்தான் மீண்டுமொருமுறையாக உணர்த்தியுள்ளார்கள். மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லிமின் என்னும் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகரிகச் சந்தையில் வேறு எதையும் கொள்முதல் செய்பவர்களல்ல. அவர்களிடம் நிரந்தரமாகத் தங்கியிருப்பது கும்பல்ரீதியாகச் செயல்படும் கோழைத் தனமே!

இப்படியொரு மத அடிப்படைவாதத் தன்மையை அவர்கள் ஆண்டுக்காண்டு புதுப்பித்துக்கொண்டிருப்பது மதத்தின் மீதான பற்றுதலினால் அல்ல; குர்-ஆனின் மீதான மரியாதையினாலும் அல்ல! இவற்றின் மீதான புரிதலை அவர்கள் வளர்த்துக்கொண்டிருந்தால், தஸ்லிமா நஸ்ரீனுக்கு எதிராக எழுதும் இன்னொரு பேனா அவர்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கும். எப்போது மாற்றுக்கருத்துகளை மக்கள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியவில்லையோ அப்போதெல்லாம் தாக்குதல் மட்டுமே அடிப்படைவாதிகளுக்குக் கைவந்தகலையாக இருக்கின்றது. புரிந்து கொள்ளும்படி சொல்ல முடியாத காரணம் என்ன? மாற்றுக்கருத்துகளை அவர்களால் குர்-ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பெறமுடியாமல் போவதே சரியான காரணம். குர்-ஆனையும் ஹதீஸையும் காலங்காலமாக வாசித்துக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் மட்டுமே! ஆண்கள் நிரம்பிய சபைகளில் ஆண்கள் மாத்திரம் நிகழ்த்தும் மார்க்க உரைகள் ஒரு சிற்றோடைபோலவே முஸ்லிம் சமூகத்தை வந்து சேருகின்றது. பல்வேறு தரப்பினருக்கும் இது போதாமையாகவே இருக்கின்றது.

ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக மத அடிப்படைவாதிகள் முன்னகர்ந்து வரும்போது, அங்கு வேறெந்தவிதமான தர்க்க நியாயங்களுக்கும் இடமிருப்பதில்லை; அவர்கள் ஆண்களாகவே இருப்பது கூடுதல் கெட்ட அம்சம்! தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணுரிமைக் கருத்துகள் நான்குகால் பாய்ச்சலைக் கொண்டவை. அவை தவறானவை எனச் சமூகம் கருதினால், அதற்கான காரணமும் சமூகத்தின் நடைமுறைகளுக்கு உள்ளேதான் உள்ளது. இதைச் சமூகம் திருத்திக்கொள்ள முன்வர வேண்டும்




தஸ்லிமா நஸ்ரீனின் மீதான தாக்குதல் நடந்த இந்தக் காலகட்டத்தை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம்களின் வாழ்வு நாலாத் திசைகளிலிருந்தும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது; இவர்களோ தஸ்லிமாவைத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டிய சச்சார் குழு அறிக்கை, அதன் தொடர்பாக எழுந்த இட ஒதுக்கீடு சம்பந்தமான பலத்த கூக்குரல், மும்பைக் குண்டுவெடிப்புகளில் ஏராளமான முஸ்லிம்கள் மரணதண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை பெற்றிருப்பது, இதுபோன்ற தண்டனைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோவைக் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள், முஸ்லிம்கள்மீது மட்டுமே திரும்பத் திரும்பக் குத்தப்படும் பயங்கரவாத முத்திரை, இந்தியப் பாதுகாப்புத் துறையும்-மாநிலக் காவல் துறைகளும் முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளும் என்கவுன்ட்டர்கள், காஷ்மீர்ப் பிரச்சினை, ஈராக்-ஈரான்-ஆப்கன்-எல்லாவற்றுக்கும் மேலான நிரந்தர பாலஸ்தீனப் பிரச்சினை, ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீஃப் நடத்தப்பட்ட விதம் என இவையெல்லாமும் பின்னிப் பிணைந்து முஸ்லிம்களை வதைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் உலகப் பயங்கரவாதியாகச் சித்திரிக்கப்பட ஒரு தூசு அல்லது துரும்பு போதும்! ஆனால், இங்குள்ளவர்களும் வேறெங்கு உள்ளவர்களும் மத அடிப்படைவாதப் பிரச்சினைகளில் மட்டுமே இணைகிறார்கள்; போராடுகிறார்கள். மும்பை, கோவைக் குண்டு வெடிப்புகளில் தீர்ப்புகள் வெளிவந்திருக்கும் இச்சமயத்தில், முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டிய காரணிகள் உள்ளன. அந்த இரண்டு நகரங்களிலுமான குண்டு வெடிப்புகளுக்கு முன்னாலும் அந்நகரங்களில் பயங்கரமான வன்முறைகள் வெடித்துக் கிளம்பின. அவற்றில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாயினர்; முஸ்லிம் மக்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன; அவர்கள் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டார்கள். பலர் ஊனமடைந்தனர். ஆனால், இத்தகைய கொடூரங்களுக்கு இன்னும் வழக்குகள் பதிவாகவில்லை; குற்றப் பத்திரிகைகள் இல்லை; விசாரணை இல்லை! நீதி இல்லை. ஆனால், இதற்குப் பின்னர் நடந்தவற்றிற்கு எல்லாம் முடிந்து மரண தண்டனைவரை வந்தாகிவிட்டது. மும்பைக் கலவரங்களை விசாரித்து எல்லா உண்மைகளையும் கோரங்களையும் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனின் அறிக்கை. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் போராடியே தீர வேண்டிய நெருக்கடி இருக்கின்றது; நீதி நியாயங்களைக் கோரிப்பெறும் அவசியம் இருக்கின்றது. ஆனால், இந்தப் போராட்டங்களை முன்னெடுக்க, நீதியின் குரலை முழக்க இன்று இங்கே எந்த இஸ்லாமிய அமைப்பும் இல்லை. எந்த முஸ்லிம் ஜமாத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. யாருக்கும் அதைப் பற்றிய அக்கறையில்லை. ஆனால், தஸ்லிமாவை அடித்து விரட்டும் அளவுக்கு இங்கே வீரம் மண்டிக்கிடக்கின்றது.

இது போன்ற மற்றொரு பிரச்சினையில் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் குடிக் கலாச்சாரம் குறித்த அவருடைய கருத்தரங்கக் கட்டுரைக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ஹெச்.ஜி. ரசூல். அவருடைய கட்டுரை மறுக்கப்படவோ தவறானது என்று சுட்டிக்காட்டவோ நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இஸ்லாம் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ரசூல் சுட்டிக்காட்டுகிற அனைத்துமே தக்க ஆதாரங்கள் கொண்டவை என்று அவர் கூறுகிறார். இதனை மேலும் பரிசீலிக்க வேண்டியது அவசியம். நம்மைச் சூழ்ந்துள்ள திருமண உறவு முறைகள், வணிக உறவுகள், அரசியல் தொடர்புகள், மற்றும் பிற நெருக்கடிகளில் இஸ்லாமியக் கோட்பாட்டின் ஏதாவது ஒரு எல்லையை நாம் மீறிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அவை கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை. மாறாக அதை வெளிப்படுத்தும் கலை, இலக்கிய வடிவங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற சமூகச் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் சேதங்களையே உண்டாக்கும். ஆய்வுகளை முன்வைப்போர் எதிரிகளாகப் பாவிக்கப்படுவது கடும் தவறு. பண்டைய யுத்த தந்திரங்களிலேயே மூழ்கி மூழ்கி, பொது எதிரியின் அடையாளத்தை மறந்துவிட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் ஆகிக்கொண்டிருக்கிறது. தன் நிழலை எதிரியாக்கி அந்நிழலோடேயே சண்டைபோட பயிற்சி கொடுக்கப்படுகின்றது முஸ்லிம் சமூகம். உள் முரண்களுக்கு ஒன்று கூடும் முஸ்லிம்கள், எப்போது வெளி எதிரிகளைப் பார்ப்பார்கள்? சுயமான தங்கள் அரசியல் சக்தியை மீட்டெடுக்கும் அவசியத்தை எப்போது உணர்வார்கள்?




காலச்சுவடு

http://kalachuvadu.com/issue-93/page32.asp

free web hit counter image



முஸ்லீம் தீவிரவாதிகள் தஸ்லிமாவைத் தாக்கினர்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், ஐதராபாத்தில் எம்ஐஎம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார்.

எழுத்தாளர் தஸ்லிமா, நேற்று ஐதராபாத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட எம்ஐஎம் (மஜ்லிஸ் இத்தீஹாதுல் முஸ்லிமீன்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் தஸ்லிமா மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

விழா அமைப்பினர் மீதும் இவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். ஜன்னல்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எம்ஐஎம் எம்எல்ஏ.,க்கள் மூவரை கைது செய்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் நஸ்லிமா அழைத்துச் செல்லப்பட்டார்.

நஸ்லிமா 'லஜ்ஜா' என்ற சர்ச்சைக்குரிய புத்தக்கத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டார். இதற்கு வங்கதேசம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


பெண்ணியம்,பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனித சுதந்திரம் என்று எழுதும் பதிவர்களும்
இஸ்லாம் ஒரு அஹிம்சையை போதிக்கும் மதம் என்று பதிவிடுபவர்களும் நிறைந்திருக்கும்
தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.




free web hit counter image

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில்
"உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள்

வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு

ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும்
ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது
குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும்.

இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள்

உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ (பெண் தெய்வம்) இந்தப் பாடலைப் பாடுவது போல
கற்பனை செய்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். சொர்க்கம் நிச்சயம்


தேன் குரலில் தேனூறும் ராகம் திகட்டாமல் இருப்பது என்ன அதிசயமோ



ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வெளியான வருடம்: 1985
வரிகள்: வைரமுத்து


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

UyiraeUnakkaaga-Th...




free web hit counter image

தேசியகீதம் என்னும் ஸ்லோகம்

தேசியகீதத்தை அவமானப்படுத்தியதாக இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி மீது குற்றம் சாட்டுகிறார்கள் கர்நாடக அரசியல் வாதிகளும் மற்றும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (இலைக்காரன் உட்பட). முன்னதாக இரண்டு பாயிண்ட்ஸ்

1. மைசூர் இன்போசிஸில் நடந்தது ஒரு அரசு விழா அல்ல
2. திரு.நாராயணமூர்த்தி ஒரு அரசு அதிகாரியும் அல்ல

தேசியகீதம் பாடுவதை வைத்து மட்டுமே ஒருவருடைய தாய்நாட்டுப் பற்றை அளவிட முடியாது.
நாராயணமூர்த்தியை தேசதுரோகி என்று குற்றம் சுமத்தும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதையே மறந்து பல ஆண்டுகள் ஆகிறது.
கர்நாடகாவில் வெளிமாநிலத்தவரை குறிப்பாக தமிழர்களை இரண்டாம் தர குடி மக்களாக தான் நடத்தி வருகிறார்கள். தங்கள் மாநிலத்திற்கென தனி கொடி வைத்திருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். முக்கிய நிகழ்ச்சிகளில் கர்நாடக கொடி தான் முதன்மை படுத்தப்படும்.

திரு.நாராயணமூர்த்தி அவர்கள் கட்டம் கட்டப்பட்டிருப்பதற்கு சில காரணங்கள்

1. அடுத்த ஜனாதிபதியாக அவர் முன்னிறுத்தப் படுகிறார்
2. இன்போசிஸில் கன்னடர்களுக்காக தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காதது
3. காவேரி இறுதி தீர்ப்பை பற்றிய அவருடைய கருத்து

தேசியகீதத்தின் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்
இதுவும் பக்தியின் பெயரால் அர்த்தம் தெரியாத சமஸ்கிருத ஸ்லோகங்களை முணுமுணுப்பது போலத்தான்